2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கூடுகள் அமைத்து இறால் பிடிக்க ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் தடை

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கூடுகள் அமைத்து இறால் பிடிக்கப்படுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் தடைசெய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (26) தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறை மற்றும் சிறகுவலை மீன்பிடி தொடர்பாக, கிராமிய  கடற்றொழில் அமைப்புக்களின் தலைவர்களும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை (26) காலை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலிலே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறகுவலை, தங்கூசி வலை, சுருக்கு வலை, வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடிப்பது போன்ற தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. 

அதேவேளை, இழுமடி, சங்கிலி, வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பதனை தடைசெய்தல் பண்ணைப்பாலம் போன்ற பகுதிகளில் 5 மீற்றருக்கு அப்பால் வலை பாய வேண்டுமென்றும் என்ற விடயங்களும் இங்கு தீர்மானிக்கப்பட்டன. 

அத்துடன், ஒவ்வொரு பிரதேச சிறகு வலை தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்ந்து, அவற்றினை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராமிய கடற்றொழிலாளர்கள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அத்துடன், தங்கூசி, சுருக்கு, மற்றும் வெடி மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கலந்துரையாடலின் போது உறுதியளித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், 521வது படைமுகாமின் பிரிகேடியர்  திசாநாயக்க மற்றும் மண்டைதீவு கடற்படை தளபதி உட்பட கிராமிய கடற்றொழிலாளர்கள் அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .