2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீதி நடைமுறைகளை மீறிய மூவருக்கு 4000 ரூபா தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ – 9 வீதி கிளிநொச்சியில் வீதி நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட 3 பேருக்கு 4000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.

வாகனத் தரிப்பிடத்தினூடாக மோட்டார் சைக்கிளினைச் செலுத்திச் சென்றவருக்கும், விபத்து ஏற்படும் விதமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திச் சென்ற ஒருவருக்கும் தலா 1500 ரூபா தண்டமும், திரும்புவதற்கான சமிக்ஞை விளக்கினை ஒளிரவிடாமல் திரும்பியவருக்கு 1000 ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர்கள் திங்கட்கிழமை (03) நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .