2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாநகர சபையின் வீதி புனரமைப்பிற்கு 100 மில்லியன் நிதி

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நிதிப்பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ். மாநகர சபைக்குட்பட்ட வீதிகளினை மீளப் புனரமைப்பு செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா புதன்கிழமை (28) தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துக் கூறும் போதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைக்குட்பட்ட வீதிகளான சி.பொன்னம்பலம் வீதி, விக்டோரியா வீதி, கந்தப்பசேகரம் வீதி, ஐ{ம்மா பள்ளிவாசல் வீதி, அத்தியடி வீதி, புங்கங்குளம் வீதி, நல்லூர் குறுக்குத் தெரு, கச்சேரி நல்லூர் வீதி உள்ளிட்ட வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளது.

இவ்வீதிகளின் புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தவினால் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததினையடுத்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் குறித்த தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X