2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் கடந்த வாரம் 117 பேர் கைது

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரம் வெவ்வேறு குற்றங்கள் புரிந்த 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தாக்குதல்களில் அடித்துக்காயப்படுத்திய குற்றத்திற்காக 49 பேரும், சந்தேகத்தின் பேரில் 05 பேரும், விபத்து ஏற்படுத்தியமை, மதுபோதையில் குழப்பம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றங்களிற்காக தலா 02 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, ஆபாசப்படம் வைத்திருந்தமை, சண்டை ஏற்படுத்தியமை, உத்தரவின்றி வீட்டுக்குள் உட்பிரவேசித்தமை, கடத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகிய குற்றங்களுக்காக தலா ஒருவரும், திடீர் சுற்றி வளைப்பின் போது 04 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை, சந்தேகத்தின் பேரில் தலா 09 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 02 பேரும், வேறு குற்றங்கள் புரிந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .