2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபசார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு 12ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் ஆ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 13ஆம் திகதி யாழ். விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட   முற்றுகையின் போது விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய 8 பேரில் இருவர் தாம் நீண்ட கால காதலர்கள் எனக் கூறியமையினால்    பதிவு திருமணம் செய்து திருமண அத்தாட்சி பத்திரத்தை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

இன்றைய தினம் ஆறு பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்ட மருத்துவ அறிக்கைக்கு பின்னர இவர்களில் இரண்டு பெண்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

ஏனைய நான்கு பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் ஆ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .