2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வியாபார நிலையத்தில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்; திருட்டு

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.திருநெல்வேலி சந்தியிலுள்ள வியாபார நிலைமொன்றில் 4,17,000 ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் நேற்றிரவு (6) திருடப்பட்டுள்ளதாக வியாபார நிலையத்தின் உரிமையாளரான சி.விஜயராஜா முறைப்பாடு செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிகசஞ்சீவ ஜெயக்கொடி இன்று (07) தெரிவித்தார்.

குறித்த நிலையத்தின் உரிமையாளர் இன்று அதிகாலை நிலையத்திற்கு சென்றபோது, நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பால்மாக்கள், சவர்க்காரங்கள், டின் மீன்கள் மற்றும் குளிர்பானங்கள்  உள்ளிட்ட 4 இலட்சம் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களும் 17,000 ரூபா பணமும் திருட்டுப்போயுள்ளதாக நிலையத்தின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும்; தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .