2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வர்த்தகர்களுக்கு ரூபா 53 ஆயிரம் தண்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சட்டத்தினை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்கள் 7 பேருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை 53 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்.நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில், 7 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்று (21) வழக்குத் தொடரப்பட்டது.

இதற்கமைவாக, காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபாவும், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 2 வர்த்தகர்களுக்கு தலா 1500 ரூபா வீதம் 3 ஆயிரம் ரூபாவும் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .