2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களின் 9 படகுகள் விடுவிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்டு, பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய விடுதலை செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களின் 9 படகுகளையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று (04) விடுவித்தார்.
 
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 மீனவர்களின் 4 படகுகளும், யாழ். காரைநகர் கடற்பரப்பில் வைத்து 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களின் 5 படகுகளுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
 
மேற்படி படகுகளில் வந்த மீனவர்கள் ஏற்கனவே சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் படகுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
 
மேற்படி மீனவர்களின் படகுகளை பொறுப்பேற்ற இலங்கை கடற்படையினர், படகுகளை இந்திய கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர். தொடர்ந்து இந்திய கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் அவர்களின் படகுகளை ஒப்படைக்கவுள்ளதுடன், மீனவர்கள் தங்கள் படகுகள் கிடைக்கப்பெற்றது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதரகத்திடம் தெரிவிக்கவேண்டும் என நீதவான் குறிப்பிட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .