2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் 02 இறுவட்டு நிலையங்கள் முற்றுகை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். நகரில் ஆபாசப்பட இறுவட்டுக்களை விற்பனை செய்த 02  இறுவட்டு விற்பனை நிலையங்கள் திங்கட்கிழமை (17) முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில்  இருவரை கைதுசெய்ததாகவும்  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார்  தெரிவித்தனர்.

யாழ். நாவலர் வீதியிலும் கன்னாதிட்டி சந்தியிலுமுள்ள 02 இறுவட்டு விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.  மேற்படி விற்பனை நிலையங்களிலிருந்து 20 ஆபாசப்பட இறுவட்டுக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி விற்பனை நிலையங்களில் ஆபாச இறுவட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக  யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .