2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீடொன்றிலிருந்து 20 பவுண் நகைகள் கொள்ளை

Super User   / 2013 நவம்பர் 07 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 20 பவுண் நகைகள் நேற்று புதன்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரம் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் வீட்டில் திருட்டுப் போன சம்பவம் வீட்டின் உரிமையாளர்களுக்கு இன்று காலையிலேயே தெரியவந்தது.

இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .