2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'21ஆவது நூற்றாண்டில் ஊடகங்கள் - எல்லைப்பிறங்களும் புதியதடைகளும்' கலந்தாய்வரங்கு

Suganthini Ratnam   / 2011 மே 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் '21ஆவது நூற்றாண்டில் ஊடகங்கள் - எல்லைப்பிறங்களும் புதியதடைகளும்' என்ற கருப்பொருளில் எதிர்வரும் 10ஆம் திகதி கலந்தாய்வரங்கொன்று நடைபெறவுள்ளது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல்கூட மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு டிஜிட்டல் வீடியோ மாநாடு நடைபெறவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கை எல்லைகளற்ற ஊடகவியலார் அமந்த பெரகர வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் ஊடகவியலாளர்களும் அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் யாழ். அமெரிக்கத் தகவல்கூட இணைப்பாளர் கிருசாந்தி ஜெறினிடம் 021 2220665 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X