2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேரையும்   எதிர்வரும்  17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார்  உத்தரவிட்டார்.

இவர்களை மேற்படி  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியாவின் நாகப்பட்டினம், ஜகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்த மேற்படி 32 இந்திய மீனவர்களையும்  காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்து, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .