2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் கடந்த வாரம் ரூ.35 இலட்சம் பணம், பொருட்கள் கொள்ளை

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற 15 கொள்ளைச் சம்பவங்களில் 35 இலட்சத்து 76 ஆயிரத்து 30 ரூபா பெறுமதியான பணம், நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி. ரஞ்சித் பாலசூரிய வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட  முறைப்பாட்டின்   பிரகாரம் யாழ்ப்பாணம், மானிப்பாய், உரும்பிராய், சாவகச்சேரி  போன்ற பிரதேசங்களில், வீடுகள், வியாபார நிலையங்களில் மற்றும் வழிப்பறிகள் மூலமாக இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இக்கொள்ளைச்   சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்  சிலர் பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .