2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பௌத்த துறவிகள் மரணம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலை - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .