2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வீட்டுதிட்டத்தில் 3,504 வீடுகள் பூர்த்தி

Kanagaraj   / 2014 மே 07 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


இந்திய அரசின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 8,350 வீடுகள் அமைக்கும் பணியில் 3,504 வீடுகள் அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்து, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று புதன்கிழமை (07) தெரிவித்தார்.

அத்துடன், 2,636 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகையில், 2,210 வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவுகளும் இடம்பெற்று வருகின்றதாகத் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்திய வீட்டுத்திட்டம் அமைக்கும் பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும், பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 540 வீடுகளும், கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1,914 வீடுகளும், பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 768 வீடுகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 282 வீடுகளும் என மொத்தம் 3,504 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X