2025 ஜூன் 18, புதன்கிழமை

தந்தை செல்வாவின் 36ஆம் ஆண்டு நினைவு தினம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


மூதறிஞர் தந்தை செல்வாவின் 36ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் யாழில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் தந்தை செல்வா அறக்கட்டளை தலைவர் எஸ். ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் தந்தை செல்வாவின் நினைவிடத்தில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் உப்பட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .