2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் 4 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பின் உற்பத்தி திறன் வீழ்ச்சி

George   / 2014 நவம்பர் 11 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தில் 4000 ஹெக்டேயர் நிலப்பகுதி உற்பத்தித்திறன் குறைந்த நிலப்பரப்பாக காணப்படுவதாக வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், செவ்வாய்க்கிழமை(11) தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 82 ஆயிரத்து 694 ஹெக்டேயர் (82694.01 ஹெக்டேயர்) நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 4 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலங்கள் உவர் நீராக மாற்றமடைவதால் இந்த நிலங்களின் உற்பத்தித்திறன் குறைவடைந்துள்ளது.

இதனால் இத்தகைய நிலங்களில் விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். தொண்டைமானாறு பகுதியிலே அதிகளவான நிலங்கள் இவ்வாறு உவர்த்தன்மையாக மாறியுள்ளதாக அவர் மேலும் கூறினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .