2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் 4 பேர் தீ விபத்துக்களால் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தீயில் கருகிய நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மரணப் பதிவேட்டு புள்ளிவிபரத் தரவுகள் தெரிவித்துள்ளன.

தீயினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 8 பேர் கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. மரணமடைந்தவர்களில்  3 பெண்கள் அடங்குகின்றனர்.

குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே இந்த தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவு மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X