2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாதத்தில் நேற்று 22ஆம் திகதி வரை 142.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிடைத்த 81.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை விட அதிகமாக இருப்பினும், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கிடைத்த மழைவீழ்ச்சியை விட குறைவானதாக காணப்படுகிறது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 395.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் 2011 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் 301.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த வருடம்; (2013) முழுவதும் 784.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இந்த வருடம் இன்று வரை 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் கூடுதலான மழை வீழச்சி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .