2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 66 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 66 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும் 4 பேரும் சூழல் மாசடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 8 பேரும் மதுபோதையில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும்  8 பேரும் பொது இடத்தில் மது அருந்தி இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 15 பேரும் அடங்குவதாகவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .