Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பருத்தித்துறை பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார்.
இந்த 8 பேரும் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ். பருத்தித்துறை நகரப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததாகவும் இதனையடுத்து, அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் 8 பேர் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குகின்றனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவது தொடர்பில் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago