2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீவகக் கல்வி வலயத்தில் 83 ஆசிரியர்களை இடமாற்ற சிபார்சு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரட்ணம் கனகராஜ்

யாழ். தீவகக் கல்வி வலயத்திலிருந்து 83 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் இடமாற்ற சபையினாலேயே இவ்வாறு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களின் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான சிபார்சுகளை அந்தந்த கல்வி வலயங்களில் அமைந்திருக்கும் ஆசிரியர் இடமாற்ற சபை, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வருகின்றது. 

அந்த வகையில், தீவகக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் 166 ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவதற்கான விண்ணப்பங்களை கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபைக்கு அனுப்பியிருந்தனர்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தீவகக் கல்வி வலய ஆசிரியர் இடமாற்ற சபை, யாழ்.மாவட்ட வலயங்களிற்கிடையிலான இடமாற்றங்களில் மூன்று வருடங்கள் தீவகத்தில் சேவையாற்றிய 9 ஆசிரியர்களை பதிலாசிரியர் இல்லாமல் விடுவிப்பதாகவும், 69 ஆசிரியர்களை பதிலாசிரியர்களுடன் விடுவிப்பதாகவும் சிபார்சு செய்தது.

மேலும், வடமாகாண மாவட்டங்களுக்கிடையிலான இடமாற்றத்தில் ஒரு ஆசிரியரை பதிலாசிரியர் இல்லாமலும், இன்னுமொரு ஆசிரியரை பதிலாசிரியருடனும் விடுப்பபதற்கும், மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றத்தில் ஒரு ஆசிரியரை பதிலாசிரியருடனும், இரண்டு ஆசிரியர்களை பதிலாசிரியர்கள் இல்லாமலும் இடமாற்றம் செய்வதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .