Menaka Mookandi / 2011 மார்ச் 08 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். தொண்டமனாறு, செல்வச் சந்நிதி ஆலய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாடசாலை மாணவன் படுகாயம் அடைந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இந்த மாணவனும் படைச் சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறியில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இதுவரையில் அறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் பொலிஸிலும் முறையிட்டதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago