Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். அரியாலை கிழக்கு, பூம்புகார் மற்றும் நாவற்;காடு பகுதிகளில் அண்மையில் மீளக்குடியேறிய மக்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 'செவனத' என்ற உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனம் முன்வந்துள்ளதாக யாழ். மாகநகரசபை முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
இப்பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிறுவனம் முன்வந்துள்ளதுடன், மக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக இனங்காணப்பட்டு பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு பலதன்னார்வ நிறுவனங்கள் உதவி புரிவதற்கு காத்திருப்பதாகவும் யாழ். மாகநகரசபை முதல்வர் குறிப்பிட்டார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025