Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இவர் தினமும் வேலைக்கு செல்பவரென்பதுடன், உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருபவரெனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
கரணவாயைச் சேர்ந்த பரமலிங்கம் சர்வானந்தம் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவர்.
சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.பாஸ்கரன், சடலத்தை பிரேத பரிசோதனைகக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.
வயோதிபருடைய மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025