Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் மே தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்க யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காமையினால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எமது வட கடல் வளங்கள் இதுவரை பாதுகாக்கப்படவில்லை. எமது கடற்றொழிலாளர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலைமை சில பிரதேசங்களில் காணப்டுகிறது.
இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய மீன்பிடிப்புக்கு இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவி;ல்லை. மீனவர்களின் கடல் உபகரண அழிவுகளுக்கு எந்தவித நஷ்டஈடுகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் மே தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago