2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சியில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.  நாகர்கோவில் பகுதியில் வெடிபொருளொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹலோ  ட்ரஸ்ற் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளரான சிவநேசன் நிஷாந்தன் (வயது 22)  என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆவார்.  

யாழ்.  நாகர்கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பணியாளர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை தவறுதலாக அந்த வெடிபொருள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X