2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மே 18 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த முருகானந்தராசா நிஷா (வயது 17) என்பவரே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு  அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.                                 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X