2025 மே 21, புதன்கிழமை

நகுலேஸ்வரத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நகுலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் இராதகிருஷ்ணன் (வயது 52) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இவர் தெல்லிப்பளை கருகம்பானை கவுனாவத்தை வைரவர் கோவிலில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற   பொங்கல் விழா மற்றும்  வேள்வியில் கலந்துகொண்டு விட்டு தனது வீட்டிற்கு செல்லாது நகுலேஸ்வரத்திலுள்ள கொட்டிலொன்றில் தங்கியிருந்ததாகவும் பின்னர்   இன்று காலை இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X