2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 14 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கும் வடமாகாண வைத்தியசாலைகளுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான வைபவத்தில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X