Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் திருட்டுச் சம்பவமொன்றில் ஈடுபட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை தலா இரண்டரை இலட்சம் ரூபா ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது.
புன்னாலைக்கட்டுவன் தெற்கில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் 66 பவுண் தங்கநகைகளை திருடிய குற்றச்சாட்டில் இச்சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கடந்த இரு வாரங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இச்சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரியதைத் தொடர்ந்து அவர்களை பிணையில் செல்வதற்கான அனுமதியை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கஜநிதிபாலன் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago