2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில். கடல் கொந்தளிப்பு; கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டில் தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக யாழ்.குடாக்கடல் நீரேரிப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற் தொழிலுக்கு செல்லவில்லை.

யாழ்.குடாக்கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் காற்று பலமாக வீசுவதன் காரணமாக கடல் தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் எனக் கருதி மீனவர்கள் கடற்றொழில் உபகரணங்களை வீடுகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றதுடன் அவர்களது ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கரையில் தரித்து வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .