2025 மே 17, சனிக்கிழமை

யாழ். சிறைக்கைதிகளுக்கு கல்வி புகட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு கல்வி புகட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  யாழ். சிறைச்சாலை கைதிகளுக்கும் கல்வி புகட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டார  தெரிவித்துள்ளார்.

யாழ். சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
 
சிறைக்கைதிகளின் நலன் கருதி அவர்களின் கல்வி அறிவைப் பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் கல்வி அறிவுள்ளவர்களாக சிறைக் கைதிகளை மாற்றி அவர்கள் குற்றம் செய்வதைக் குறைப்பதற்கு இந்த நடடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். 

யாழ். சிறைச்சாலைக் கைதிகளுக்கு விவசாய நடடிக்கைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு இவர்கள் மரக்கறி உற்பத்தி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .