2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

26ஆம் 28ஆம் 30ஆம் திகதிகளில்  காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இணுவில், மருதனார்மடம், உடுவில், கோண்டாவில், தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, கோம்பயன்மணல்;, தட்டார்தெரு, ஓட்டுமடம், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும். 

27ஆம் 29ஆம் 31ஆம் திகதிகளில்; காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்

01ஆம் திகதி  8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கச்சேரிப் பிரதேசம், அரியாலைப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .