2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.குடா கடலில் கடலுணவு பிடிப்பதற்கு தென்பகுதி நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன : கணேசமூர்த்தி

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.குடா கடற்பகுதிகளில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு தென்பகுதியைச் சேந்த 15 நிறுவனங்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளதாக யாழ்.பிராந்திக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார.;

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

யாழ்.குடாநாட்டில் தென்பகுதி நிறுவனங்கள் பல குடாக்கடலில் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளன. குடாக்கடலில் உள்ள கடற்றொழில் சங்கங்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே இதற்கு அனுமதியளிக்க முடியும்.

கடற்றொழில் சங்கங்கள் தென்பகுதி நிறுவனங்களுக்கு கடலுணவு பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு கோரினால் மட்டுமே இதற்கு நடவடிக்கை எடுக்கமுடியும்.

கடந்த 30 வருடகாலமாக குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தங்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகையில் திடிரென தென்பகுதி நிறுவனங்கள் இந்தக் கடலில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி கோரியிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X