2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் திருவிழாவுக்கான வேலைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான  ஏற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

25 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 17ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் இளைப்பாறுதற்காக  ஆலயத்தின் வடக்கு வீதி, தெற்கு வீதிகளில் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள மலசலகூடங்களும் மாநகரசபையினால் புனரமைக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X