2025 மே 21, புதன்கிழமை

யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 09 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி,எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்று மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இக்கைகலப்பில் வாள் வெட்டும் இடம்பெற்றதால் ஒரு இளைஞன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான பிரபா (வயது 28) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X