2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் ஒருவாரத்தில் 20 குற்றச்சம்பவங்கள் பதிவு : பொலிஸார்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணத்தில்  கடந்த ஒரு வாரகாலத்தில் 20 பாரிய குற்றங்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 குற்றங்களும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 குற்றங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

வீடு உடைத்து திருட்டு, கத்திக்குத்து, மாடு கடத்தல், போலி தங்கநகைகள் அடகு வைத்தல், தங்கநகைகள் அபகரிப்பு போன்ற சம்பவங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. 

அத்துடன், யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 84 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேரும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 15 பேரும் சூழலுக்கு மாசடைவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 15 பேரும் மதுபோதையில் பொதுவிடங்களில் இடையூறு விளைவித்த மற்றும் மதுபோதையில் சுற்றித்திரிந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வீதிகளில்  செல்வோரின் தங்கநகைகளை அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன. இவர்கள் தலைமறைவாகியுள்ளதால் நடவடிக்கை எடுப்பதில் சிரமமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வாரகாலத்தில் தங்கநகைகள் அபகரிப்பு தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சுன்னாகம், கந்தரோடை விகாரை வீதியில் கடந்த 25ஆம் திகதி மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். அவ்வாறே கோப்பாய் பகுதியில் கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில்; வந்தவர்களினால் தங்கநகை அபகரித்துச் செல்லப்பட்டது. இராசா வீதி கோப்பாயிலும் இவ்வாறான சம்பவமொன்று  இடம்பெற்றதாகவும்  யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .