2025 ஜூன் 21, சனிக்கிழமை

அதிகம் பேசினால் ஒலிவாங்கியை முடக்குவேன் என மாவையை எச்சரித்த அமைச்சர் டக்ளஸ்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். தவறும் பட்சத்தில்  உங்கள் ஒலிவாங்கியை முடக்குவேன்' என்று என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் மாவை எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ், 'நான் தான் இந்த குழுவின் தலைவர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்தைக் கூறுங்கள். இல்லை என்றால் உங்களை பேசாவிடாமல் ஒலிவாங்கியை முடக்கிவிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாவை எம்.பி, 'நீங்கள் ஒலிவாங்கியை முடக்கினாலும் நான் தொடர்ந்து உரையாற்றுவேன்' எனக் கூறிவிட்டு தனது உரையை முடித்துக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy M Monday, 08 October 2012 01:41 PM

    மாவை அண்ணா நீங்கள் பலே கில்லாடி அண்ணா ...வெளியிலே இராணுவத்தை எதிர்ப்பது போலவும் உள்ளே உறவும் வைத்து கலக்குறீங்கண்ணா.சபாஷ்
    சுமதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .