2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பழையில் பாடசாலை செல்லாத மாணவர்களின் தொகை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அண்மைக்காலமாக  பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்கள் மற்றும் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல இடங்;களில் அண்மையிலேயே மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 120 மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதிருந்தனர். இதில்; 20 மாணவர்கள் மீளிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவேண்டிய வயதில் பாடசாலை செல்லாமலிருக்கின்றனர். இதனை அடையாளம் கண்டு உரிய அதிகாரிகள் மூலம் மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .