2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மத ரீதியான முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: யாழ். வணிகர் கழக தலைவர்

Super User   / 2012 நவம்பர் 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

தமிழர் பிரதேசங்களில் வேறு மத சின்னங்கள் நிறுவப்பட்டு மத ரீதியான முரண்;பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தெரிவிததார்.

இவ்வாறான சம்பவங்கள் இன, மத ஒற்றுமைக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் சர்வமத பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.  

யாழ். வணிகர் கழகத்தின் கேடடபோர் கூடத்தில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான குழுவினர் மற்றும் வணிகர் கழக பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"கடந்த காலத்தில் எமது மக்கள் பல துன்ப துயரங்களை சந்தித்து இன்று ஒரு நிலைக்கு வந்திருக்கின்றார்கள். இருந்த போதும் அவர்கள் அந்த நிலையில் இருந்து இன்னமும் விடுபட முடியாத நிலையில் உள்ளனர்.

போர் முடிந்து மூன்று வருடங்களை கடந்து போயுள்ள நிலையிலும் மக்கள் இன்னமும் இயல்பு வாழ்ககைக்கு திரும்பாத நிலையில் காணப்படுகின்றார். தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையிலேயே இன்றும் மக்கள் காணப்படுகின்றார்கள்.

தமிழர் பிரதேசங்களில் வேறு மத சின்னங்கள் நிறுவப்பட்டு மத ரீதியான முரன்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வறுமையை  கருத்தில்கொண்டு இவ்வாறான மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இன, மத ஒற்றுமைக்கும் பாதகமாக சூழலை ஏற்படுத்தும்.

30 வருடகால யுத்திற்கான காரணத்தை விளங்கி கொள்ளதாக சிலர் சமாதானத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.  தமிழ் மக்களின் உரிமைககள் மறுக்கப்பட்டதால் தான் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது இவ்வாறான சம்பவங்களை கருத்தில்கொண்டு அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கையை சர்வமத தலைவர்கள் எடுக்க வேண்டும்" என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .