2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி; யாழில் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் வந்த சந்தேகநபர்கள் இருவர், வீட்டிலிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் குறித்த பெண்ணும் அவரது தாயாரும் கூச்சலிட்டதில் அங்கு கூடிய பிரதேசவாசிகள் சந்தேகநபர்களை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது ஒருவர் மாத்திரம் அகப்பட்டுக்கொண்ட நிலையில் ஏனைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .