2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்திற்குள் இராணுவ பிரசன்னம் தவிர்க்கப்பட வேண்டும்: கண்டன அறிக்கையில் தெரிவிப்பு

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மாணவர்களின் சாத்வீகமான போராட்டங்களை அடக்க ஆயுதப்படைகளை அனுமதிக்கக் கூடாது, பல்கலைக்கழகத்திற்குள் இராணுவ பிரசன்னம் தவிர்க்கப்பட வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி கண்டித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் இன்று முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கலந்து கொண்ட போது, குறித்த கண்டன பிரேரணையை அவர் கையளித்தார்.

அந்த கண்டன அறிக்கையில், ஆயுதப் படைகளின் தாக்குதலினால் சேதமடைந்த பகுதிகள் உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டும், தாக்கப்பட்டமை சம்பந்தமாக விசாரணை நடாத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எமது தமிழினத்தின் உயர் கல்விக் கூடமான யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பாராளுமன்ற உறுப்பினரும் இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும், பொலிஸ் புலனாய்வு பிரிவினராலும், காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளமையும், கல்விக் கூடத்தில் இராணுவ பிரசன்னத்தையும் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .