2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்த கைகலப்பு இடம்பெற்றது. இதனை தடுக்க முற்பட்டபோதே மேற்படி உத்தியோகஸ்தர் தலையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X