2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 06 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த இடமாற்றத்தை நிறுத்த கோரிக்கையே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். நாவாந்துறை ஜந்து சந்தி பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"மாணவர்களின் எதிர்காலத்திற்காக தன்னை அர்ப்பணித்த முபாறக் அதிபரை மாற்ற நினைப்பது ஏன்?", "மௌலவி சுபியான் அவர்களே பழிவாங்காதீர்கள்", "கல்வி வளர்ச்சிக்கு உதவுபவரை அவமானப்படுத்தாதீர்கள்", "அன்று பாடுபட்டவரை இன்று மறக்காது எம் சமூகம்..." உள்ளிட்ட பல கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X