2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இருவேறு விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 14 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி
 
இருவேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலியானதுடன் காயமடைந்த மூவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் மற்றும் கரடிபோக் சந்தியில் இன்று மதியம் 1.00 மணியளவில் இவ்விரு விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்விபத்து சம்பவத்தில் பெரிய பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கணேசன் வயது (36) என்பவர் உயிரிழந்ததுடன், பரந்தன் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் சஞ்சீவ், திருச்செல்வம் கஜேந்திரன் (வயது 26) மற்றும் சச்சிதானந்தம் காண்டீபன் (வயது 27) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படடுள்ளார்.

ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பரந்தன் சந்தியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வவுனியா தனியார் பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரில் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் பொலிஸ் ஜீப்புடன் துவிச்சக்கரவண்டி மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் இறந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதென்றும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
 
விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், கிளிநநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .