2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 11 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கம்சன் (வயது 23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீதிக்கு குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்புடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். உரும்பிராய் மானிப்பாய் வீதியிலேயே இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X