2025 ஜூன் 18, புதன்கிழமை

பாடசாலை அபிவிருத்தி செயற்பாட்டில் பாடசாலை சமூகத்தின் கருத்துக்கள் அவசியம்: சந்திரகுமார்

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஐயாயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அந்தந்த பாடசாலைச் சமூகங்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்' என் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார்; தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று  இடம்பெற்ற ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் இரண்;டாம் கட்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்திட்டத்தில் கடந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 15 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மேலும் 10 பாடசாலைகள் இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளன.

எனவே இந்த அபிவிருத்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற 5 இலட்சம் ரூபா நிதியில் பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன்; வினைத்திறன் மிக்க அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும்  பெற்றோர், ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பாடசாலைச் சமூகங்களின் கருத்துக்கள் இப்பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் அவசியம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .