2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தெல்லிப்பழையில் திங்களன்று ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.பிரசாத்,நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

அன்று காலை 8 மணிமுதல் தொடக்கம் இந்த போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தரன்  ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கின்றது .



  Comments - 0

  • aj Tuesday, 23 April 2013 07:10 AM

    ஒருநாள் ஆரப்பட்டம் செய்தோம் போனோம் என்று இல்லாமல் தொடர் போராட்டம் ஒன்றே ஒரு முடிவை தரும். ஏன் இன்னும் இந்த திருட்டுக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்யவில்லை? அது நீதி மீதி நம்பிக்கை இருந்தால் தானே.

    தமிழர்களின் காணிகளை பாதுகாக்க போராட்டம், ஆகவே வடக்கில் இருக்கும் ரௌடிகள் கழிவு எண்ணெய், பொல்லுகளுடன் போராட்டத்தை குழப்ப இப்போது இருந்தே வேலையை ஆரம்பிங்கோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X