2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.கோண்டாவிலில் ஒருவர் மீது வாள்வெட்டு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இழக்கான நபர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு முன்னால் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த எஸ்.யோகராஜா என்பவரே காயமடைந்துள்ளார்.

யாழ். பலாலி வீதி, கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வாளினால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .